தீயில் கருகி 7 வயது சிறுமி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி அருகே தீயில் கருகி 7 வயது சிறுமி பலியானார்.
.
.
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி கரடிபாளையம் அம்மன் தெருவை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 40), கூலித்தொழிலாளி. இவரது மகள் கீதாஸ்ரீ (7). மத்திகிரி அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி விறகு அடுப்பில் அவரது பெற்றோர் வெந்நீர் வைத்திருந்தனர். அதை மாணவி கீதாஸ்ரீ எடுக்க முயன்ற போது அவரது ஆடையில் தீப்பிடித்து உடல் கருகி காயம் அடைந்தார். உடனே சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் மருத்து வமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கீதாஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com