பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
.
.
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி போலீசார் சிந்தகும்மனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு பணம் வைத்து சூதாடிய சிந்தகும்மனப்பள்ளியை சேர்ந்த முனியப்பன்(வயது 50), சிவக்குமார் (34), முனிராஜ் (32), எட்ரப்பள்ளி மூர்த்தி (30), வீரமணி (27), சின்ன கொத்தூர் முருகன் (30) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.350 பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com