search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்திருப்பேரை அச்சுதடிமாட சுவாமி கோவில் கொடை விழா
    X

    அச்சுதடிமாட சுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு சுவாமி யாடிகள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்த காட்சி.

    தென்திருப்பேரை அச்சுதடிமாட சுவாமி கோவில் கொடை விழா

    • இரவு 10.30 மணிக்கு அச்சுதடிமாட சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.
    • கொடைவிழாவை முன்னிட்டு இன்று காலை, மதியம் பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை யோகீஸ்வரர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அச்சுதடிமாட சுவாமி கோவில் கொடை விழா இன்று இரவு நடைபெறுகிறது. கொடை விழாவை முன்னிட்டு கடந்த 21-ந் தேதி கால் நாட்டுதல் விழாவுடன் தொடங்கியது.

    தீர்த்தம் எடுத்து வருதல்

    நேற்று மாலை 6 மணிக்கு தாமிரபரணி நதியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், இரவு 9 மணிக்கு கும்பம் ஏற்றி குடி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சிவனணைந்த பெருமாள் கொடை விழா, மதியம் 11 மணிக்கு சுவாமியாடிகள் தாமிரபரணி நதியில் நீராடி வருதல், 1 மணிக்கு மஞ்சள் நீராடுதல், அதை தொடர்ந்து மதிய கொடை விழா நடைபெற்றது. இன்று மாலை 5 மணிக்கு சுவாமி மகர நெடுங்குழைக்காதர் பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கொடைவிழா

    இரவு 10.30 மணிக்கு அச்சுதடிமாட சுவாமிக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து இரவு 1 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் தீபாரா தனையுடன் சாமகொடை விழா நடைபெறு கிறது. கொடைவிழாவில் வில்லிசை நிகழ்ச்சி, நாதஸ்வரம், நையாண்டி மேளம், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    கொடைவிழாவை முன்னிட்டு இன்று காலை, மதியம் பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவும் அன்னதானம் வழங்கப்படு கிறது. கொடைவிழாவிற்கான ஏற்பாடுகளை யோகீஸ்வரர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×