

திருப்பூர்,
திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி.. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டது. குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வந்தனர். ஆசிரியர்கள் வரவேற்று ஆடல் பாடல்களுடன் மாணவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்வடைய செய்து வகுப்புகளை ஆரம்பித்தனர். பள்ளிதாளாளர் கார்த்திக்கேயன், பொருளாளர் லதா கார்த்திக்கேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் சக்தி மிருதுளா ஆகியோர் மாணவர்களை வரவேற்று உற்சாகப்படுத்தினர்.