search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருவேப்பிலைப்பாளையம்   தர்மராஜ  திரவுபதியம்மன் கோவில் திருவிழா: 5-ந் தேதி தீமிதி விழா
    X

    சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த காட்சி.

    கருவேப்பிலைப்பாளையம் தர்மராஜ திரவுபதியம்மன் கோவில் திருவிழா: 5-ந் தேதி தீமிதி விழா

    • கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது.
    • அக்னி வசந்த உற்சவம், கூந்தல் முடித்தல் நிகழ்ச்சிகளும் மாலை 6மணிக்கு திமீதி திருவிழா நடைபெறுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா பழங்காலம் தொட்டு மகாபாரத கதையை மையமாக வைத்து சித்திரை மாதத்தில் 22 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கோவில் முதல் திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமிக்கு அலங்காரம், சிறப்புபூஜைகள், தெருக்கூத்து, இன்னிசை கச்சேரிகள் நடைபெறும். சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வாண வேடிக்கை இன்னிசையுடன் இரவில் சாமி திருவீதி உலாவும்,நடைபெறுகிறது.

    நேற்று 12-ம்நாள் திருவிழாவில் சாமி சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. வருகிற 4-ந் தேதி கரகத்திரு விழாவும் 5-ந் தேதி காலை 8 மணிக்கு அரவாண், வீரபத்திரன் சாமி வீதி உலாவும், 10 மணிக்கு அரவாண் சிரசு ஏற்றும் நிகழ்ச்சியும், அரவாண் களப்பலியும், 11மணி முதல் 1 மணி வரை மகாபாரத பஞ்சபாண்டவர்கள் கதையை மையமாக கொண்ட மாடு வளைத்தல்,கோட்டை இடித்தல் நிகழ்ச்சியும், பிற்பகல் 3 மணியளவில் அக்னி வசந்த உற்சவம், கூந்தல் முடித்தல் நிகழ்ச்சிகளும் மாலை 6மணிக்கு திமீதி திருவிழா நடைபெறுகிறது. அதன் பிறகுமஞ்சள் நீராட்டு விழா, தர்மர் பட்டாபிஷேகம், தெப்ப திருவிழா, காவபூஜைகளும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×