search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேட்டரி ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசம்
    X

    பேட்டரி ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசம்

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பேட்டரி ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசம்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பெரிய வள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர் வேலாயுதம் பாளையம் பகுதிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது தனக்கு சொந்தமான பேட்டரி ஸ்கூட்டரில் தளவாபாளையம் அருகே மலையம்மன் திருமண மண்டபம் எதிரில் வந்து கொண்டிருந்த போது பேட்டரி ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று ஸ்கூட்டரில் வேகமாக எழுந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இருப்பினும் பேட்டரி ஸ்கூட்டர் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.

    Next Story
    ×