search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் பூக்களின் விலை உயர்வு
    X

    கரூரில் பூக்களின் விலை உயர்வு

    • பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வர்
    • செவ்வந்திப்பூ ரூ.220- க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும் விற்பனையானது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி,முத்தனூர், பேச்சிப்பாறை ,நடையனூர், வேட்டமங்கலம் ,குந்தாணி பாளையம், ஓலப்பாளையம், மூலியமங்கலம், புதுகுறுக்குபாளையம், பழமாபுரம், நல்லிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூக்கும், குண்டு மல்லி, முல்லை, சம்பங்கி ,ரோஜா, அரளி, செவ்வந்தி வகை பூக்களை, அருகாமையில் செயல்பட்டு வரும் பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வர்.

    கடந்த வாரம் குண்டுமல்லி ரூ.500- க்கும், சம்பங்கி கிலோ ரூ.50- க்கும், அரளி கிலோ ரூ.60- க்கும், ரோஜா கிலோ ரூ.140- க்கும், முல்லைப் பூ ரூ.400- க்கும், செவ்வந்திப்பூ ரூ.80- க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் விற்பனையானது. நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.800-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100- க்கும், அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.200- முல்லைப் பூ கிலோ ரூ.700-க்கும், செவ்வந்திப்பூ ரூ.220- க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும் விற்பனையானது. கோவில் விசேஷங்கள் அதிகமாக இருப்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×