மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி

1 டன் ரூ.15,500 க்கு வாங்கிச் சென்றனர்மரவள்ளிக்கிழங்குகளை டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்
மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி
Published on

வேலாயுதம்பாளையம், 

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம், குளத்து பாளையம், குந்தாணி பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்,பாளையம், நல்லிக்கோவில், பழமாபுரம் ,புன்னம் சத்திரம், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்குகளை பயிரிட்டுள்ளனர். 10 மாதங்களில் மரவள்ளிக்கிழங்கு விளைந்தவுடன் உள்ளூர் பகுதிக்கு வரும் தரகர்கள் மூலம் மரவள்ளிக்கிழங்குகளை டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர் .

மரவள்ளிக்கிழங்குகளை வாங்கிய புரோக்கர்கள் புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, புதன்சந்தை, மல்லூர், கீரனூர்,சின்னசேலம்,ஆத்தூர்,மல வேப்பங்கொட்டைஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி வைக்கின்றனர் . வாங்கிய மரவள்ளி கிழங்குகளை ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் பல ரக ஜவ்வரிசி களாகவும், கிழங்கு மாவு போன்றவைகளை தயார் செய்கின்றனர் . மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சத்து அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது . அதே போல் ஜவ்வரிசி விலை உயரும் போதும், விலை வீழ்ச்சி அடையும் போதும் சேகோசர்வ் மூலம் மரவள்ளி கிழங்கு களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த வாரங்களில் மரவள்ளிக்கிழங்கு ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் 1 டன் ரூ.15,500 க்கு வாங்கிச் சென்றனர்.சிப்ஸ் தயாரிப்பவர்கள் 1 டன் மரவள்ளிக்கிழங்கை ரூ.16, 500க்கு வாங்கிச் சென்றனர் .நேற்று ஜவ்வரிசி தயாரிக்கும் அதிபர்கள் 1 டன் மரவள்ளி கிழங்கு ரூ.12,000க்கு வாங்கிச் சென்றனர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ.13 ஆயிரத்து 500 க்கு வாங்கிச்சென்றனர். மரவள்ளி கிழங்கு உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com