search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகளூர் தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சி
    X

    புகளூர் தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சி

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புகளூர் தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சி

    வேலாயுதம்பாளையம் ,

    கரூர் மாவட்டம் புகளூர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் தீபாவளி பண்டி கையை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி புகளூர் செம்பட பாளையத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் நடைபெற்றது.

    பயிற்சியில் தீய ணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும் விபத்தில் சிக்கிக் கொண்டவர்க ளை காப்பாற்று வது குறித்தும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி னர்.அப்போது சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் முன்னிலை யில் வெடிக்க வேண்டும். பட்டாசு மற்றும் புஸ்வா னங்கள் வெடிக்கும் போது காலணி அணிய வேண்டும். பட்டா சுகளை மைதா னங்கள் மற்றும் சமதளத்தில் வைத்து வெடிக்க வேண்டும். பட்டாசு மற்றும் புஸ்வா னங்கள் வெடிக்கும் போது அருகில் தண்ணீர் வாளி வைத்தி ருக்க வேண்டும். பட்டாசு வெடித்தவுடன் நன்றாக சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்.

    அதேபோல் விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் எப்படி அவர்க ளை மீட்க வேண்டும் என்பது குறித்தும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. மேலும் பல்வேறு ஆலோ சனைகளை தெரிவித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்ப டுத்தினர். அதேபோல் பட்டாசு வெடிப்பது குறித்த ஒத்திகை பயிற்சி நடை பெற்றது.

    Next Story
    ×