search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் - உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு
    X

    வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் - உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு

    • இங்கு வாங்கப்படும் கரும்பு கள் ஆலைகளில் வெல்லங்க ளாக காய்ச்சி எடுக்கப்பட்டு அருகா மையில் உள்ள ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.
    • உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு அடைந்துள்ளது.

    வேலாயுதம்பாளையம்

    கரூர்மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பா ளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நன்செய் புகளூர், தளவாபாளையம், கடம்பன்குறிச்சி, வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு வாங்கப்படும் கரும்பு கள் ஆலைகளில் வெல்லங்க ளாக காய்ச்சி எடுக்கப்பட்டு அருகா மையில் உள்ள ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.

    இங்கு வாங்கப்படும் வெல்ல சிப்பங்களை லாரிகளில் ஏற்றி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்திரபிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களுக்கும் வியாபாரிகள் அனுப்பி வைப்பர்.

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,170 வரையிலும் விற்பனையானது. நேற்று உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,220 வரையிலும் விற்பனையானது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு அடைந்துள்ளது.

    Next Story
    ×