search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை-வருகின்ற 9-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
    X

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை-வருகின்ற 9-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை-வருகின்ற 9-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கபட்டுள்ளது
    • இப்பயிற்சியில் சேர கல்வித்தகுதியாக 2 ஆண்டு பயிற்சி பிரிவுகளுக்கு குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியும் ஓராண்டு பயிற்சி பிரிவிற்கு 8- ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

    கரூர்,

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அறக்கொடை அறக்கட்டளை சார்பில் 2014- ஆம் ஆண்டு முதல் தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தேசிய பயிற்சிக் குழும அங்கீகாரம் பெற்ற இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்டு மாதம் தொடங்க உள்ளது. எலக்ட்ரீசியன், பிட்டர், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக் பிரிவுகளுக்கு 2 ஆண்டு பயிற்சியும், வெல்டர் பிரிவு மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர கல்வித்தகுதியாக 2 ஆண்டு பயிற்சி பிரிவுகளுக்கு குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியும் ஓராண்டு பயிற்சி பிரிவிற்கு 8- ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

    இதில் சேர விரும்புவோர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை ஞாயிற்றுக்கிழமை தவிர, மற்ற அனைத்து வேலை நாட்களிலும் நேரில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், விபரங்களை தொழிற்பயிற்சி நிலையத்தின் 04324 - 296442 / 9486505953 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் ஜூன் 9 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு காகித நிறுவன அறக்கொடை தெரிவித்து கொள்கிறது.

    Next Story
    ×