search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிலான கைப்பந்து போட்டி
    X

    மாநில அளவிலான கைப்பந்து போட்டி

    • மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது
    • பொள்ளாச்சி எஸ்டிசி வெற்றி பெற்றது.

    கரூர்:

    ரோட்ராக்ட் கிளப் ஆப் கரூர் மற்றும் கரூர் மாவட்ட கைப்பந்து சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான கைப்பந்து போட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடத்து. கரூர் மாவட்ட கைப்பந்து சங்க பேட்ரன் சி.பாஸ்கர், அட்லஸ் எக்ஸ்போர்ட்ஸ் தலைவர் எம்.நாச்சிமுத்து, கரூர் மாநகராட்சி துணை மேயர்தாரணி ப.சரவணன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். சென்னை லயோலா, மதுரை அமெரிக்கன், சென்னை செயின்ட் ஜோசப், பொள்ளாச்சி எடிசி, திருச்சி ஜமால், திருச்சி செயின்ட் ஜோசப், பெருந்துறை கலைக்கல்லூரி, கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரி ஆகிய 8 அணிகள் மோதுகின்றன. ஏ பிரிவில் எஸ்டிசி பொள்ளாச்சி, மதுரை அமெரிக்கன், திருச்சி செயின்ட் ஜோசப், குமாரசாமி கிளப். பி பிரிவில் சென்னை லயோலா, சென்னை செயின்ட் ஜோசப், பெருந்துறை, ஈரோடு ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. முதல் போட்டியில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணியை, பொள்ளாச்சி எஸ்டிசி 25க்கு 14, 25க்கு 23 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்றது. 2வது போட்டியில் கரூர் குமாரசாமி கிளப், மதுரை அமெரிக்கன் அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டிகள் நாளை நடைபெறுகின்றன.

    Next Story
    ×