search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் மாநில அளவிலான வளைய பந்து போட்டிகள்
    X

    கரூரில் மாநில அளவிலான வளைய பந்து போட்டிகள்

    • கரூரில் மாநில அளவிலான வளைய பந்து போட்டிகள் நடைபெற்றன
    • இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்

    கரூர்:

    கரூரில் தமிழ்நாடு வளைய பந்து சங்கம் மற்றும் கரூர் புலியூர் நெல்சன் வளைய பந்து குழு சார்பில் 45-வது மாநில அளவிலான மிக இளையோருக்கான வளையபந்து போட்டி கரூர் வெங்கமேடு அன்னை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை தொடங்கியது.இருநாட்கள் நடைபெறும் போட்டிக்கு தமிழ்நாடு வளையபந்து சங்கச் செய–லாளர் டி.சங்கர் தலைமை தாங்கினார். கரூர் அன்னை வித்யாலயா மேல்நிலைப் பள்ளி தாளா–ளர் எம்.கீதா மணிவண்ணன், தமிழ் நாடு வளையபந்து சங்க பொருளாளர் அனந்த–கிருஷ்ணன், இணைச்செய–லாளர்கள் கீர்த்தி–வாசன், உமாபதி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    போட்டியை கிருஷ்ண–ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகாமசுந்தரி பங்கேற்று போட்டியை துவக்கி வைத்து பேசி–னார். போட்டியில் கரூர், சேலம், நாமக்கல், தர்ம–புரி, திருநெல்வேலி, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சை உள்ளிட்ட 22 மாவட்டங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற–னர்.

    போட்டியில் வெற்றி–பெறும் மாணவ, மாணவி–களுக்கு இன்று பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன. போட் டிக்கான ஏற்பாடுகளை புலியூர் நெல்சன் வளைய பந்துகுழுவின் தலைவர் கார்த்தி, இணைச் செ–யலா–ளர் ரூசோ உள்ளிட்டோர் செய்துள்ள–னர்.

    Next Story
    ×