search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிலான கோ-கோ போட்டி
    X

    மாநில அளவிலான கோ-கோ போட்டி

    • மாநில அளவிலான கோ-கோ போட்டி நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு பள்ளியில் நடைபெற்றது
    • தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு 12 பேர் தேர்வு

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய் யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நட த்திய 67-வது மாநில அள வில் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாநில தேர்வு கோ-கோ போட்டி கள் நடைபெற்றது.போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார்.சென்னை, வேலூர், கடலூர், சேலம், கோவை, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய 8 மண்ட லங்களில் தேர்வு பெற்ற 72 மாணவர்கள் பங்கேற்று விளையாடினர்.அதில் 18 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடை பெற்ற இறுதிப்போட்டியில் 12 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அளவில் நைடைபெறும் கோ-கோ போட்டியில் பங்கேற்க உள்ளனர்.இதில், நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி, உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×