search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்கள் சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம்
    X

    பள்ளி மாணவர்கள் சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம்

    • பள்ளி மாணவர்கள் சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம் சென்றனர்.
    • பொன்னணியாறு அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    கரூர்:

    தமிழக அரசின் சுற்று சூழல் துறை மற்றும் தேசிய பசுமை படை சார்பில், கரூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவ, மாண வியர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கலைப் பயணம் சென்றனர்.

    கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து இந்த பயணம் தொடங்கியது. மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் ஜெயமுருகன் தலைமை வகித்தார்.

    மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவியர், சின்ன தாதம்பாளையம் பகுதியில் உள்ள வன விரிவாக்க கோட் டத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கு, மரக்கன்றுகள் வளர்ப்பதன் முக்கியத்துவம், அதனால் சுற்றுசூழலுக்கு ஏற் படும் நன்மைகள் குறித்து எடுத் துரைக்கப்பட்டது. பின்னர், கடவூர் பகுதியில் அமைந்துள்ள இயற்கை மூலிகை மருந்துகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்ட.அதைத் தொடர்ந்து, நம்மாழ்வார் வாழ்விடம் மற்றும் பொன்னணியாறு அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு மாணவ, மாணவியர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் விஜேந்திரன், வனவர் பாஸ்கர், மாவட்ட சுற் றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி, தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×