ஜனவரி முதல் அகவிலைப்படி வழங்க மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் தீர்மானம

ஜனவரி முதல் அகவிலைப்படி வழங்க மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுமின்வாரிய ஓய்வூதியர் சங்க 26ம் ஆண்டு விழா
ஜனவரி முதல் அகவிலைப்படி வழங்க மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் தீர்மானம
Published on

கரூர்:

கரூர் மாவட்ட மின்வாரிய ஓய்வூதியர் சங்க 26ம் ஆண்டு விழா கரூர் நாரத கான சபாவில் நடந்தது. சங்க தலைவர் ஜவஹர் தலைமை வகித்து பேசினார். கௌரவ தலைவர் சிவராமன், துணைத்தலைவர் ரத்தினா சலம், பெரியண்ணன், அமைப்பு செயலாளர் கருப்பண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச்செயலாளர் கோபாலன் வரவேற்றார். ஆண்டு அறிக்கையை செயலாளர் ராஜ கோபாலும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் சின்னசாமி வாசித்தனர்.

மாநில அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் 3 சதவீத அகவிலைப்படியை ஜூலை 1ம் தேதி முதல் வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார். மத்திய அரசு வழங்குவது போல் தமிழக அரசும் அகவிலைப்படி ஜனவரி 1-ஆம் தேதி முதல் வழங்க வேண்டும். அகில இந்திய அளவில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மாநில சங்க நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com