

வேலாயுதம்பாளையம்,
புகழூர் நகராட்சி பகுதியில் நீட் விலக்கு நம் இலக்கு குறித்த ஆன்லைன் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நகராட்சித் தலைவர் குணசேகரன், பதிவு செய்து தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன்,கரூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் மற்றும் புகழூர் நகராட்சி கவுன்சிலர்கள், நகர வார்டு தி.மு.க. பொறுப்பாளர்கள், மாவட்ட, பேரூர் தி.மு.க. பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.