search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.54 லட்சத்தில் நிறைவுற்ற புதிய திட்டப்பணிகள்
    X

    ரூ.54 லட்சத்தில் நிறைவுற்ற புதிய திட்டப்பணிகள்

    • அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ தொடங்கி வைத்தார்
    • புஞ்சை தோட்டகுறிச்சி பேரூராட்சியில்கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறக்கப்பட்டது

    கரூர்,

    கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் பூமி பூஜை விழா மற்றும் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி தளவாபாளையம் பகுதியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.12 லட்சம் நிதியில் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா, கணபதி பாளையம் புதூர் பகுதியில் ரூ.10 லட் சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக் கூடம் திறப்பு விழா, தளவா பாளையம் ஆதிதிராவிடர் தெருவில் ரூ 2 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை, மலையம்பாளையம் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை, வீரராஜபுரம் விநாயகர் கோவில் அருகில் ரூ5 லட்சம் மதிப்பீட்டில் பொதுக்கழிப்பிடம் கட் டுவதற்கான பூமி பூஜை 15 வது நிதி குழு மானியத்தில் ரூ17 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.பூமி பூஜை மற்று திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அரவகுறிச்சி எம்.எல்.ஏ., மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம் மற்றும் பணி முடிவுற்ற பூங்கா ஆகியவற்றை திறந்து வைத்தும் புதிதாக கட்டப்படும் பணிகளுக்கு பூமி பூஜையும் செய்து பணியினை தொடங்கி வைத்தார்.இதில் பேரூராட்சித் தலைவர் ரூபா முரளிராஜா, துணைத் தலைவர் சதீஸ், செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.







    Next Story
    ×