தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்

தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்
தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்
Published on

வேலாயுதம்பாளையம் 

கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி காந்தியார் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், புகழூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான கருணாநிதி நூற்றாண்டு விழா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமை புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். முகாமில் மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு மற்றும் காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து உரிய மருந்து மாத்திரைகளை வழங்கினர். மருத்துவ பரிசோதனை முகாமில் நகர்மன்ற துணைத் தலைவர் பிரதாபன், நகராட்சி கவுன்சிலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com