search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 பேருக்கு குண்டாஸ்
    X

    3 பேருக்கு 'குண்டாஸ்'

    • சிறுமி பாலியல் வழக்கில் சிக்கியவர்கள் மீது குண்டாஸ்
    • எஸ்பி பரிந்துரைின் பேரில் மாவட்ட கலெக்டர் உததரவு

    கரூர்,

    கரூரில் சிறுமி பாலியல் குற்ற வழக்கில் கைதான, மூன்று நபர்கள். மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த ஆண்டு டிசம்பரில் பதிவு செய்யப் பட்ட, சிறுமி பாலியல் குற்ற வழக்கில், கரூரை சேர்ந்த சதீஷ்குமார், (வயது 32), சணப்பிரட்டியை சேர்ந்த மதன் (32), வடக்கு காந்தி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், சதீஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரையும், குண்டர் காவல் சட்டத்தின் கீழ் கைது தடுப்பு செய்ய, எஸ்.பி., சுந்தரவதனம், மாவட்ட கலெக்ட ருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக் கொண்ட, கலெக்டர் பிரபு சங்கர், மூன்று பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, நேற்று உத்தரவிட்டார்.இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் உள்ள சதீஷ்குமார் உள்பட மூன்று பேருக்கும் அதற்கான, உத்தரவு நகலை, கரூர் மகளிர் போலீசார் வழங்கினர்.

    Next Story
    ×