

கரூர்
மாநில அளவிலான கேரம் போட்டிக்கு அரசு பள்ளி மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கரூரில், வருவாய் மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடந்தது. அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவியர் இரட்டையர் பிரிவில் குரும்பப்பட்டி அரசு உயர்நி லைப்பள்ளி, 9ம் வகுப்பு மாணவி மகாலட்சுமி, 8ம் வகுப்பு மாணவி ஹர்ஷினிபிரியா ஆகியோர் முதலிடம் பிடித்து மாநில அளவிலான கேரம் போட் டிக்கு தகுதி பெற்றனர். மாணவிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் கண்ணன், உதவி தலை மையாசிரியர் ரமேஷ், உடற்கல்வியாசிரியர் கதிர்வேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.