search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிர்களை நாசம் செய்யும் மயில்கள்
    X

    பயிர்களை நாசம் செய்யும் மயில்கள்

    • கரூரில் விவசாய பயிர்களை நாசம் செய்யும் மயில்களால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்
    • மயில்களை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினருக்கு கோரிக்கை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல், அத்திப்பாளையம், குப்பம், கோம்புப்பாளையம், ஓலப்பாளையம், நல்லிக்கோவில், ஒரம்புப்பாளையம் பேச்சிப்பாறை, நடையனூர், கரைப்பாளையம், திருக்காடுதுறை, பழமாபுரம், புன்னம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல், சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை விவசாயிகள் பயிர்செய்துள்ளனர். இந்நிலையில் இந்த பகுதிகளில் ஏராளமான மயில்கள் உள்ளதால் தானியங்கள் பயிர் செய்துள்ள பகுதிகளுக்கு சென்று தானியங்களையும், பயிர் வகைகளையும் மயில்கள் கொத்தி நாசப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில் மயில்களின் தொல்லையால் மேலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே வனத்துறையினர் இப்பகுதியில் உள்ள மயில்களை பிடித்து வனப் பகுதிகளுக்கு கொண்டு சென்று விட்டு விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×