லாலாப்பேட்டை சந்தையில் வாழைத்தார் விலை சரிவு

லாலாப்பேட்டை சந்தையில் வாழைத்தார் விலையில் சரிவு ஏற்பட்டது விவசாயிகள் கவலை அடைந்தனர்
லாலாப்பேட்டை சந்தையில் வாழைத்தார் விலை சரிவு
Published on

கரூர்:

லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டியில் வாழைத்தார் ஏலத்தில் விற்பனை நடந்தது. கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் பரவலாக வாழை சாகு படி செய்துள்ளனர். இப்பகுதிகளில் விளையும் வாழைத்தார்களை அறுவடை செய்து லாலாப்பேட்டையில் உள்ள வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து விற்று வருகின்றனர். தற்போது மழைக்காலமாக இருப்பதால் வாழைத்தார் விலை சரிந்துள்ளது. நேற்று நடந்த ஏலத்தில் பூவன் தார் ரூ.250க்கும், ரஸ்தாளி தார் ரூ.300க்கும், கற்பூரவள்ளி தார் ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com