என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழா மற்றும் நீதிபதிக்கு பாராட்டு விழா
    X

    குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழா மற்றும் நீதிபதிக்கு பாராட்டு விழா

    • குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழா மற்றும் நீதிபதிக்கு பாராட்டு விழா நடைபெற்றது
    • இவ்விழாவிற்கு வக்கீல் சங்க தலைவரும் அரசு வழக்கறிஞருமான சாகுல்ஹமீது தலைமை வகித்தார்

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்க ஆண்டு விழா மற்றும் பணி மாறுதலாகி செல்லும் நீதிபதி தினேஷ்குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது, இவ்விழாவிற்கு வக்கீல் சங்க தலைவரும் அரசு வழக்கறிஞருமான சாகுல்ஹமீது தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சார்பு நீதிபதி சமுத்திரக்கனி வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதி குறித்து வாழ்த்துரை வழங்கினார். விழாவில் அரசு வக்கறிஞர் நீலமேகம், துணைத் தலைவர் முருகேசன், இணை செயலாளர் சரவணன், துணைத் தலைவர் சுதா மற்றும் வழக்கறிஞர்கள் மது, சந்திரசேகர், மது, பிரபு, தோகைமலை குமார், சரவணன், மேட்டு மருதூர் குமார், கார்த்திகேயன், காத்தலிங்கம், நிகில்அரவிந்த் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் மருதூர் தமிழரசன் நன்றியுரையாற்றினார்.


    Next Story
    ×