கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அனுமதியின்றி இயங்கும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளதுஅதிகாரிகள் உடனடி ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Published on

வேலாயுதம்பாளையம், 

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம், உப்புப்பாளையம், பசுபதிபாளையம், தென்னிலை, பரமத்தி காரு டையாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு கல்குவாரிகள் அரசு அனுமதி அளித்ததற்கு மேல் குழி தோண்டப்பட்டு பாறைகள் வெட்டப்பட்டு வருகிறது. பல கல்குவாரிகள் அனுமதி பெறாமல் வெட்டப்பட்டு வருகிறது. மேலும் அனுமதி முடிந்தும் பல கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. சாலை ஓரத்தில் உள்ள கல்குவாரி பகுதி வழியாக வாகனங்கள் செல்லும்போது நிலை தடுமாறி, கல்குவாரியில் வாகனங்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் இரவு, பகல் பாராமல் கல்குவாரியில் வெடி வைப்பதால் அருகாமையில் உள்ள வீடுகள் அதிர்கின்றன. சுற்றுப்புற சூழல் பாதிப்படைந்து வருகிறது. எனவே கனிமவளத்துறை அதிகாரிகள் நியாயமான, நேர்மையான முறையில் ஆய்வு செய்து கல்குவாரி அதிபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com