search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உப்பில் அயோடின் கண்டறியும் ஆய்வு
    X

    உப்பில் அயோடின் கண்டறியும் ஆய்வு

    • உப்பில் அயோடின் கண்டறியும் ஆய்வு நடைபெற்றது
    • அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில்

    கரூர்:

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பாக எளிய முறையில் உப்பில் அயோடின் கண்டறியும் ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினர் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் நடேசன் தலைமை வகித்தார். தாளாளர் கோதை நடேசன், செயலாளர் இன்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் துணை முதல்வர் ரதிதேவி வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக குளோபல் சமூக நலப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் சொக்கலிங்கம்,

    சிசிஐ தமிழ்நாடு மாநில தலைவர் - டிஎன்சிபிஇசி- ன் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு,

    தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளர் ரமேஷ், வேதியியல் ஆய்வாளர் அகிலன், குளோபல் சமூக நலப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன்

    ஆகியோர் கலந்து கொண்டு அயோடின் நுண்சத்து குறித்த விழிப்புணர்வு மற்றும் அயோடின் கலந்த உப்பினை கண்டறியும் பரிசோதனை ஆய்வையும் மாணவிகளிடையே நடத்திக் காட்டினார்கள்.

    முடிவில் கல்லூரியின் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரமாபிரியா நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் கல்லூரி உள் தர கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிற துறை சார்ந்த துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவிகள் உட்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×