ரூ.30.75 லட்சம் அரசு நலத்திட்ட உதவிகள்

ரூ.30.75 லட்சம் அரசு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட்டது
ரூ.30.75 லட்சம் அரசு நலத்திட்ட உதவிகள்
Published on

கரூர்:

ரூ.30.75 லட்சம் அரசு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் 62 உள்ளிட்ட 362 மனுக்கள் பெறப்பட்டது.

பின்னர் ரூ.4,14,240ல் 12 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஒரு நபருக்கு தங்கத் தந்தை திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா, தாட்கோ திட்டத் தின் கீழ் 5 பேருக்கு ரூ.26.61 லட்சத்தில் நிலம் வாங்கும் திட்டம், தொழில் முனைவோர் திட்டத்தின் சார்பில் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் அரசு மானியத்துடன் தொழில் தொடங்குவதற்கான ஆணைகள் என மொத்தம் 18 பேருக்கு ரூ.30.75 லட்சத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளைகலெக்டர் வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதின், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அன்புமணி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com