search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்
    X

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்பட்டது.

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்

    • மாணவி காளி பிரியா அண்ணாமலையார் தீப பாடலுக்கு நடனமாடினார்.
    • நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் தீபமேற்றி, சொக்கப்பனை கொளுத்தினர்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டி சோரி பள்ளியில் கார்த்திகை தீபத் திருநாள் கொண் டாட்டம் நடைபெற்றது. கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் தலைமை தாங்கினார்.

    பள்ளி முதல்வர் பால சுந்தர் முன்னிலை வகித்தார். மாணவி ஷைனி பிரீத்தி வரவேற்று பேசினார். மாணவி குங்கும காயத்ரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி காளி பிரியா அண்ணாமலையார் தீப பாடலுக்கு நடனமாடி னார். மாணவி ரட்சனா கார்த்திகை பண்டிகையின் சிறப்பினை பற்றி பேசினார். மாணவர் ஜீவா கார்த்திகை தீபம் குறித்து கவிதை கூறினார்.

    நிகழ்ச்சியில் பிளஸ்-2 வகுப்பு ஒருங்கிணைப்பாளர் சுமதி, 10-ம் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வலிங்கம், கணித ஆசிரியர் சரவணன், 10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகள் குழு வாக இணைந்து தீபமேற்றி, சொக்கப்பனை கொளுத்தினர். முடிவில் மாணவி ரேணுகா தேவி நன்றி கூறினார். ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், கல்வி ஆலோ சகர் உஷா ரமேஷ், இயக்கு னர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×