search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலசங்கரன்குழி அருகே ரூ.14 லட்சம் மதிப்பில் விலை பொருள் கிட்டங்கி
    X

    மேலசங்கரன்குழி அருகே ரூ.14 லட்சம் மதிப்பில் விலை பொருள் கிட்டங்கி

    • எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • மாவட்ட திட்ட இயக்குனர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

    ராஜாக்கமங்கலம்:

    மேலசங்கரன்குழி முதல் நிலை ஊராட்சியில் வேம்பனூர் கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள விவசாயம் விளை பொருட்கள் கிட்டங்கியை எம்.ஆர். காந்தி திறந்து வைத்தார்.

    ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் அய்யப்பன், ஊராட்சி துணை தலைவர் ரமேஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜாண்சிலின் விஜிலா, ஊராட்சி உறுப்பி னர்கள் முன்னிலை வகித்த னர். மேலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அதே வளாகத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை ஊராட்சி தலைவர் முத்து சரவணன் தலைமை தாங்கி நடத்தினார். கூட்டத்திற்கு மாவட்ட திட்ட இயக்குனர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகாபாய், ராஜா ஆறுமுக நயினார், பொறியாளர் கவிதா, தலைமை ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கால்நடை மருத்துவர், அங்கன்வாடி பணியாளர்கள், ரேசன் கடை ஊழியர்கள், மின்சாரவாரிய ஊழியர்கள், காவல் நிலைய ஊழியர்கள், ஊராட்சி செயலாளர் சசிகலா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு கொரோனா காலகட்டத்தில் தங்களை அர்ப்பணித்து கடமையை செய்ததற்காக அவர்களுக்கு ஊராட்சி தலைவர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோர்களால் கேடயம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. விவசாய விளை பொருட்கள் கிட்டங்கியை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் விவசாயி பங்களிப்புடன் பயன்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பன்றிவாய்க்கால் கால் வாயை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுப்பு சுவர் கட்டவேண்டும் என்றும், ஊராட்சியை மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என்றும், சாந்தபுரம் சாலை மேலசங்கரன்குழியில் நெடுஞ்சாலை துறை மூலம் நடைபெறும் கட்டுமானம் வேகமாக வேலையை முடிக்க வேண்டும் என்றும், ரோட்டு ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், நெல் அறுவடை செய்ய முடியாமல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கவும், வீடுகளில் உள்ள கழிவு குப்பைகளை சாலை ஓரம் தெருக்களில் கொட்டாமல் ஊராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வழங்கவேண்டும் என்றும், தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் புதிய தெரு விளக்கு பொருத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவேண்டும் என்றும், கிராம சபையில் சிறப்பு தீர்மானங்களாக நிறை வேற்றபட்டது.

    Next Story
    ×