விவேகானந்தா கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

கல்லூரி செயலாளர் ராஜன் கருத்தரங்கினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.கல்லூரி அகதர மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் மகேஷ் வாழ்த்தி பேசினர்.
விவேகானந்தா கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
Published on

கன்னியாகுமரி:

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் கணிதத்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி பொறுப்பு முதல்வரும், இயற்பியல் துறை தலைவருமான ஜெயந்தி தலைமை தாங்கினார். கணித துறை தலைவர் ஜெயலட்சுமி வரவேற்றார். கல்லூரி செயலாளர் ராஜன் கருத்தரங்கினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

முன்னாள் பேராசிரியர் ராமச்சந்திரன், கல்லூரி அகதர மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் மகேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

கேரள பல்கலைக்கழக தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் அனில்குமார், தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி கணிதத்துறை தலைவர் ஸ்டீபன்ஜான் ஆகியோர் கருத்து ரையாற்றினர். ஒருங்கி ணைப்பாளர் பேராசிரியர் சிவபாலன் நன்றி கூறினார். கணிதத்துறை உதவி பேராசிரியர் திருநாவுக்கரசு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். கருத்தரங்கில் கணிதத்துறை மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பிற துறை ஆசிரியர்களும் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கவுரி, ஜெயபுவனேஸ்வரி, ஹெரின்வைஸ்பெல், பிரியவதனா, அணு, செல்வகுமார், மகேஷ்வரன் மற்றும் பிரபாவதி ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com