search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு
    X

    இரணியல் அருகே 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு

    • மர்ம நபர்கள் அட்டகாசம்
    • திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இரணியல்:

    இரணியல் அருகே காரங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜாண் சேவியர் ராஜ் (வயது 69). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஆலன்விளை பகுதியில் உள்ள தனது ஒரு ஏக்கர் நிலத்தில் வாழை விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் வாழை தோட்டத்தை பார்வையிட சென்றார். அங்கு அவரது தோட்டத்திலும், பக்கத்து தோட்டத்திலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து ஜாண் சேவியர் ராஜ் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×