search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலசங்கரன்குழியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
    X

    மேலசங்கரன்குழியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

    • இரவு ஆன பிறகும் அவர் வீடு திரும்பவில்லை.
    • வேலை பார்க்கும் விவசாய தோட்டத்தில் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    கன்னியாகுமரி:

    மேலசங்கரன்குழி பகுதியைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் (வயது 61). இவரது மகன்கள் பிரபு, மணிகண்டன் ஆகியோர் சென்னையில் பணி புரிந்து வருகின்றனர். சக்திவேல் தனது மனைவி சிவந்திகனியுடன் மேலசங்கரன்குழியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை யடுத்து சக்திவேல் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். இரவு ஆன பிறகும் அவர் வீடு திரும்ப வில்லை. ஆகவே அவரை அவருடைய உறவினர்கள் இன்று தேடினர்.

    அப்போது சக்திவேல், வேலை பார்க்கும் விவசாய தோட்டத்தில் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விஷம் குடித்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    Next Story
    ×