search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நாளை கலைஞர் நூற்றாண்டு விழா கால்பந்து போட்டி
    X

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நாளை கலைஞர் நூற்றாண்டு விழா கால்பந்து போட்டி

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பரிசு வழங்குகிறார்
    • ஏற்பாடுகளையும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியினர் செய்து வருகின்றனர்.

    மார்த்தாண்டம்:

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கால்பந்து போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நாளை நடைபெறுகிறது. மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் இந்த கால்பந்து போட்டிகள் நாளை (4-ந்தேதி) காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

    தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ் கால்பந்து போட்டிகளை தொடங்கி வைக்கிறார். மாலையில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெறும் விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகின்றார். பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் கால்பந்தாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பா ளர்கள், விளை யாட்டு அலுவலர்கள், ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்கின்றனர். கலைஞர் நூற்றாண்டு விழா கால்பந்தாட்ட போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×