search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொத்தவிளை கடற்கரை சாலையில் தூக்குப் போட்டு தொழிலாளி தற்கொலை
    X

    சொத்தவிளை கடற்கரை சாலையில் தூக்குப் போட்டு தொழிலாளி தற்கொலை

    • நடைபயிற்சிக்கு சென்றவர்கள் ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்
    • வறுவேல் அந்தோணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    என்.ஜி.ஓ.காலனி :

    சுசீந்திரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட சொத்த விளை பகுதியைச் சேர்ந்தவர் வறுவேல் அந்தோணி (வயது 65), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெசி லெட். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பிறகு வறுவேல் அந்தோணி தனியாக வசித்து வந்தார்.

    அவரது 3 மகன்களும் வெளிநாட்டில் வேலையில் உள்ளனர். மகள் திருமணமாகி புத்தளம் பகுதியில் வசித்து வருகிறார். வறுவேல் அந்தோணிக்கு மது பழக்கம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி அவர் காயம் அடைந்தார்.

    இதன் காரணமாகவும் மனைவி இறந்த சோகத்திலும் வறுவேல் அந்தோணி இருந்து வந்தார். நேற்று வீட்டில் இருந்து சென்ற அவர் இரவு வீட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் இன்று காலை சொத்தவிளை கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள், அங்குள்ள ஒரு மரத்தில் வறுவேல் அந்தோணி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர். இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள், வறுவேல் அந்தோணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் வறுவேல் அந்தோணி தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×