search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.21¾ லட்சத்தில் நலத்திட்ட உதவி
    X

    தமிழ்நாடு அரசு

    மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.21¾ லட்சத்தில் நலத்திட்ட உதவி

    • கலெக்டர் அரவிந்த் தகவல்
    • மாற்றுத்திறனாளிகள் தங்களை பராமரித்து கொள்ள ஏதுவாக ரூ.1,000-ம் வீதம் 54 பயனாளிகளுக்கு ரூ.54 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு மாற்றுத்திற னாளிகள் நலனுக்காக பல் வேறு நலத்திட்டங்களை அறி வித்து செயல்படுத்தி வரு கிறது. குமரி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக உடல் இயக்கம் பாதிக்கப்பட்டோர், தொழு நோயால் பாதிக்கப்பட் டோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் மற்றும் தண்டு வட மரபு நோய் உள்ளிட்ட நாட்பட்ட நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட் டோர் ஆகியோருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை கடந்த அக்டோபர் மாதம் வரை ரூ.8 லட்சத்து 73 ஆயிரத்து 48 வழங்கப்பட்டுள்ளது. அதிக உதவி தேவைப் படும் மாற்றுத்திறனாளிகள் தங்களை பராமரித்து கொள்ள ஏதுவாக ரூ.1,000-ம் வீதம் 54 பயனாளி களுக்கு ரூ.54 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக் கான திருமண நிதியுதவி திட் டத்தின் கீழ் பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50 ஆயி ரம் வீதம் 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சமும், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 25 பய னாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 81 ஆயிரத்து 75 மதிப்பிலும், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்கா லிகள் 13 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 87 ஆயி ரம் மதிப்பிலும், வாய்பேச இயலாதசெவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் பார்வையற் றோர் மாற்றுத் திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய கைபேசிகள் 97 பயனா ளிகளுக்கு ரூ.11 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் விலையில்லா இலவச மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் 41 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 450 மதிப்பிலும், சக்கர நாற்காலி 8 பயனாளிகளுக்கும், சி.பி.சக்கர நாற்காலி 12 பயனாளிகளுக்கும், ஊன்றுகோல் 20 பயனாளிகளுக்கும், பிரைலி கைகெடிகாரம் 8 பயனாளிகளுக்கும், மடக்கு குச்சி 'மற்றும் கண் கண்ணாடி 30 பயனாளிகளுக்கும், காலிபர் 11 பயனாளிகளுக்கும், காதொலி கருவி 40 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதோடு, இலவச பஸ் பயண அட்டை 2029 மாற்றுத் திறனாளிகளுக்கும், ஏப்ரல் 2022 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 1337 நபர்களுக்கும், மத்திய அரசின் யு.டி.ஐ.டி. அட்டை 10 ஆயிரத்து 53 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×