search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டியல் இன மக்களுக்கு தொண்டு செய்தவர்கள் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
    X

    பட்டியல் இன மக்களுக்கு தொண்டு செய்தவர்கள் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

    • 29-ந்தேதி கடைசி
    • கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் அரசாணைபடி ஆண்டு தோறும் ஆதிதிராவிட மக் களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவ ருக்கு அம்பேத்கர் விருதை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. 2023-24-ம் நிதி ஆண்டிற்கான அம்பேத்க ரின் பெயரில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத் திற்கு அரிய தொண்டு செய்ப வருக்கு 2024-ம் ஆண்டின் திருவள்ளுவர் திருநாளன்று அம்பேத்கர் விருது வழங்கப்பட உள்ளது.

    குமரி மாவட்டத்தில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டுகள் செய்தவர்கள் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் விருதுக் கான விண்ணப்பத்தை குமரி மாவட்ட ஆதி திராவிட மற்றும் பழங்குடி யினர் நல அலுவலகத்தில் பெற்று 29-ந்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×