search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலியை கத்தியால் குத்திய வாலிபர்
    X

    காதலியை கத்தியால் குத்திய வாலிபர்

    • பேச மறுத்ததால் ஆத்திரம்
    • முகநூல் மூலம் பழக்கம்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரவின் ரஞ்சித் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவருக்கும் ஆலங்கோடு பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்ட தாரியான 27-வயது பெண்ணுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    அந்தப் பெண் நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வருகிறார். பழக்கத்தின் அடிப்படையில் அவர் அடிக்கடி ரஞ்சித்தை சந்தித்தார். நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மாறியது.

    இந்த நிலையில் பிரவின் ரஞ்சித்துக்கு குடிபழக்கம் இருப்பது, இளம்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால் இளம்பெண் அவருடனான தொடர்பை குறைத்துள்ளார். மேலும் முகநூல் பக்கத்தையும் பிளாக் செய்து தொடர்பை முற்றிலும் தவிர்த்துள்ளார்.

    இது பிரவின் ரஞ்சித்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர், இளம்பெண்ணை சந்தித்து காதலை தொடரும் படி வற்புறுத்தி உள்ளார். ஆனால் இளம்பெண் அதற்கு சம்மதிக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பிரவின் ரஞ்சித், நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய இளம்பெண்ணை மீண்டும் சந்தித்து தன்னுடன் பேச வலியுறுத்தினார். ஆனால் அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதில் இளம்பெண்ணுக்கு வயிற்றில் பலகத்த காயம் ஏற்பட்டது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் திரண்டதால், பிரவின் ரஞ்சித் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கத்தி குத்தில் படுகாயமடைந்த இளம்பெண் மீட்கப்பட்டு சிகிட்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிட்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் தலைமறைவாக இருந்த பிரவின் ரஞ்சித்தை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×