search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையனை மடக்கி பிடித்த பொதுமக்கள்
    X

    நாகர்கோவிலில் இன்று பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையனை மடக்கி பிடித்த பொதுமக்கள்

    • மோட்டார் சைக்கிளில் இருந்தபடி வசந்தாவிடம் ஏதோ பேச்சு கொடுத்துள்ளனர்.
    • நகை பறித்த நபர் மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளனவா? என்பது குறித்தும் விசாரணை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் தொல்ல விளையை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி வசந்தா (வயது 58). இவர் இன்று அதிகாலை 6 மணி அளவில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். வசந்தா அருகே வந்ததும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்தபடி வசந்தாவிடம் ஏதோ பேச்சு கொடுத்துள்ளனர்.

    பின்னர் திடீரென வசந்தா கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்தனர். இதை சற்றும் எதிர்பாராத வசந்தா கூச்சலிட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அதற்குள் வசந்தாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து மர்ம நபர்களை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மா்ம நபர் பொதுமக்களிடம் பிடிபட்டார்.

    ஆனால் மோட்டார் சைக்கிளை ஓட்டிய மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து பிடிபட்ட மர்ம நபர் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவாிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பிச் சென்ற மர்ம நபர் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நகை பறித்த நபர் மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளனவா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நாகர்கோவிலில் அதிகாலை வீட்டு முன் நின்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×