search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் அபிேஷகத்துக்குரிய புனித நீர் வெள்ளிக்குடத்தில் யானை மீது வைத்து ஊர்வலம்
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் அபிேஷகத்துக்குரிய புனித நீர் வெள்ளிக்குடத்தில் யானை மீது வைத்து ஊர்வலம்

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவ ராத்திரி விழா இன்று தொடங்கி உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவ ராத்திரி விழா இன்று தொடங்கி உள்ளது. வருகிற 5-ந் தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது.

    விழாவின்போது பாரம் பரிய முறைப்படி 10 நாட்களும் அம்ம னுக்கு அபிஷே கத்து க்குரிய புனிதநீரை எடுத்து வருவதற்கு யானையை பயன்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து யானை பயன்படுத்துவதற்கு வனத்துறை அனுமதி பெறப்பட்டது.

    அதன்பயனாக திற்ப ரப்பில்இருந்து கன்னியா குமரி பகவதிஅம்மன் கோவிலுக்கு யானை வரவழைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பகவதி அம்மன் அபிஷேத்துக்குரிய புனிதநீர் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கரதீர்த்த காசி விசுவநாதர் கோவில் முன்பு வைத்து பூஜை நடத்தப்பட்டது.

    அதன்பிறகு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த யானைக்கு கஜ பூஜை நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு வெள்ளிக் குடத்தில் எடுத்து நெற்றிப் பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    யானை ஊர்வலத்தை கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, கொட்டாரம் பேரூர்செயலாளர் வைகுண்டபெருமாள், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், சக்கரதீர்த்த காசி விஸ்வநாதர் கோவில் பக்தர்கள் சங்க தலைவர் சந்திர சேகர், செயலாளர் நாகராஜன், ஒன்றிய இளைஞர்அணி அமைப்பாளர் பொன் ஜான்சன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி துணைத் தலைவர் ஜெனஸ் மைக்கேல் மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்படதிரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஊர்வலம் ரெயில் நிலைய சந்திப்பு, வடக்கு ரத வீதி, நடுத் தெரு, தெற்கு ரத வீதி, சன்னதி தெரு, வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கு காலை 10மணிக்கு பகவதி அம்மனுக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    Next Story
    ×