search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்ரூத் திட்டத்தில் வெள்ளியாகுளத்தை சுத்தம் செய்ய வேண்டும்
    X

    அம்ரூத் திட்டத்தில் வெள்ளியாகுளத்தை சுத்தம் செய்ய வேண்டும்

    • குளச்சல் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்
    • அனுமதி வாங்கும் முன்பு வீடுகளை கட்டி உள்ளனர். அதற்கு எப்படி? அனுமதி அளிக்க முடியும்? என்றார்

    குளச்சல் :

    குளச்சல் நகர்மன்ற கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. ஆணையாளர் செந்தில்கு மார், மேலாளர் ஜெயன், துணை தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், நகராட்சி பொறியாளர் மணி, சுகா தார அலுவலர் ஸ்டான்லி குமார், நகரமைப்பு அலு வலர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சில் ஜாண்சன் (தி.மு.க.) பேசுகை யில், நகராட்சி பகுதியில் புல் பூண்டுகள் வெட்டப்ப டாமல் உள்ளது என்றார்.

    பனிக்குருசு (தி.மு.க.), எனது வார்டில் சாலை சேதமடைந்து பல மாதங்கள் ஆகிறது. சாலை நடுவே உள்ள மின் கம்பத்தையும் மாற்ற வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த தலைவர், மின் கம்பத்தை மாற்ற மின் வாரியத்திற்கு பணம் செலுத்த வேண்டும். முதலில் நகராட்சி வைத்துள்ள பாக்கி பணத்தை செலுத்த சொல்கி றார்கள்.

    ரகீம் (தி.மு.க.), நம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களை விடவும் மேஸ்திரிகள் அதிகம் பேர் உள்ளனர். நகர சுகாதாரம் பேண வேண்டும். அதனால் தேவையான துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார். அன்வர் சதாத், பணியா ளர்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என கூறி னார்.

    ரமேஷ் (காங்கிரஸ்), வீடு கட்ட அனுமதி கோரும் விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளது என்றார். இதற்கு நகரமைப்பு ஆய்வாளர், அனுமதி வாங்கும் முன்பு வீடுகளை கட்டி உள்ளனர். அதற்கு எப்படி? அனுமதி அளிக்க முடியும்? என்றார்.

    ஷீலா ஜெயந்தி (தி.மு.க.), சாஸ்தான்கரை டிப்போ மேற்கு சாலைக்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜேசையா பெயரை சூட்ட வேண்டும் என்றார்.

    ஜாண்சன், புதிய சிறுவர் பூங்காவிற்கு காயிதே மில்லத் பெயரை சூட்ட வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து பேசிய

    தலைவர், கடிதம் அனுப்பி உள்ளோம். பதில் வந்ததும் பெயரை சூட்டலாம் என்றார்.

    ரகீம், நகராட்சி வீடு களிலிருந்து கழிவுநீர் வெளியேறும் குழாய்களை அடைக்கக்கூடாது என கவுன்சிலர்கள் கொடுத்த பொருள் அஜெண்டாவில் சேர்க்கப்பட்டுள்ளது. இது செயல் வடிவம் காண வேண்டும். கழிவுநீர் குழாய் களை அடைத்து பொது மக்களுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது.

    ஜாண் பிரிட்டோ (தி.மு.க.), களிமார் மருத்துவ மனையிலிருந்து வெளி யேறும் கழிவுநீர் வாய்க்கா லில் கலக்கிறது. மேலும் வணிக வளாக கட்டிடங்கள், அரசு அலுவலக கட்டிடங்க ளிலிருந்தும் வெளியேறும் கழிவுநீரும் மழை நீர் வடிகாலில் கலக்கிறது.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    தொடர்ந்து புல் புதர்கள் வளர்ந்து, பாசிகள் படர்ந்து துர்நாற்றமடிக்கும் வெள்ளியாகுளத்தை அம்ரூத் திட்டத்தில் சுத்தம் செய்து பராமரிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×