search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோவாளை மலர் சந்தையில் துண்டு பிரசுரம் விநியோகித்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.
    X

    தோவாளை மலர் சந்தையில் துண்டு பிரசுரம் விநியோகித்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.

    • மதுரையில் நாளை அ.தி.மு.க. மாநாடு
    • விவசாயிகளிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கி மாநாட்டிற்கு கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

    நாகர்கோவில் :

    மதுரையில் நாளை மாநாடு நடைபெற உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநாட்டிற்கு பொதுமக்களும், தொண்டர்களும் அணி திரண்டு கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும், அமைப்பு செயலாளருமான தளவாய்சுந்தரம் அறிவுறுத்தலின் அடிப்படையில் பல கட்டமாக பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களை கவருகின்ற விதத்தில் யானை மீது நிர்வாகிகள் அமர்ந்தும், குதிரை மீது அமர்ந்தும் பொதுமக்களிடம் மாநாட்டிற்கு கலந்துகொள்ள வேண்டும் என பிரசாரம் செய்யப்பட்டது. அதுபோன்று கன்னியாகுமரி போன்ற சுற்றுலா தலங்களில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

    இந்நிலையில் இன்று காலை தோவாளை மலர் வணிக வளாகத்தில் மாநாட்டிற்கு வியாபாரிகளும், விவசாயிகளும் மாநாட்டிற்கு கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கும் விதத்தில் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் நடைபெற்றது.

    பிரசாரத்தினை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்து மலர் வணிக வளாகத்தில் உள்ள வியாபாரிகளிடமும் விவசாயிகளிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கி மாநாட்டிற்கு கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதிப்பன், நாகர்கோவில் மாநகராட்சி மன்ற உறுப்பினர் அக் ஷயா கண்ணன், முஞ்சிறை ஒன்றிய செயலாளர் ஜீன்ஸ், நாகர்கோவில் வட்ட செயலாளர் வேலாயுதம் மற்றும் மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் முத்துசாமி ராஜேந்திரன், சபரி, முருகன், தங்கம், தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×