search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி
    X

    கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி

    • கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில்20-ந்தேதி நடக்கிறது
    • ஒரு கல்லூரியில் இருந்து 5 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்

    கன்னியாகுமரி :

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் சார்பில் வருகிற 20-ந்தேதி காலை 10 மணி அளவில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு "கலைஞரும் சங்கத் தமிழும்" என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஒரு கல்லூரியில் இருந்து 5 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். 3 நிமிடங்களுக்குள் மாணவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

    போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு களும் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வருகிற 17-ந்தேதி மாலை 5 மணிக்குள் தங்களின் பெயர்களை 72005 62301 என்ற எண்ணில் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×