search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவல்கிணறில் தமிழக முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு
    X

    காவல்கிணறில் தமிழக முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு

    • மாநகர தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு
    • நாளை (7-ந் தேதி) கன்னியாகுமரியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடை பயண யாத்திரை தொடங்குகிறார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகர தி.மு.க. நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் மாநகர மாவட்ட பிரதிநிதிகள், வட்டச் செய லாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை ஒழுகினசேரியில் உள்ள குமரி கிழக்கு தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    அவை தலைவர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். மாநகர துணை செயலாளர்கள் வேல்முரு கன், ராஜன், மாநகர பொரு ளாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில மாநகர செயலா ளர் வக்கீல் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் நாளை (7-ந் தேதி) கன்னியாகுமரியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடை பயணம் யாத்திரை தொடங்குகிறார்.

    நடை பயணம் யாத்திரையை தொடங்கி வைக்க வருகை தரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட ெபாறுப்பாளர் மேயர் மகேஷ் ஆலோசனையின் பேரில் மாநகர தி.மு.க. சார்பாக மாவட்ட எல்லை யான காவல் கிணறு சந்திப் பில் 3 ஆயிரம் ெதாண்டர் களுடன் வரவேற்பு அளிப் பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

    கூட்டத்தில் பகுதி செயலாளர் துரை, ஜீவா மற்றும் 52 வட்டச் செயலா ளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×