search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க சிறப்பு முகாம்
    X

    குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க சிறப்பு முகாம்

    • தினசரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வதற்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
    • குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பார்வையற்ற மாற்றுத்திற னாளிகளுக்கு மாவட்டம் முழுவதும் செல்வதற்கும், இதர அனைத்து பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கும் இருப்பிடத்திலிருந்து கல்வி பயில்பவர்களுக்கு படிக்கும் நிறுவனத்திற்கு செல்வதற்கும், பணிபுரி வோருக்கு பணிபுரியும் இடத்திற்கு செல்வதற்கும், தினசரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வதற்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    இம்முகாம் 2023- 2024-ம் ஆண்டிற்கு நாகர்கோவில் எஸ்.எல். பி. அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை 6 நாட்கள் நடக்கிறது. இதில் மார்ச் 28-ந்தேதி செவ்வாய்கிழமை அகஸ் தீஸ்வரம் தாலுகாவிற்குட் பட்டப் பகுதியில் உள்ள வர்களும், மார்ச் 29-ந்தேதி புதன்கிழமை தோவாளை தாலுகாவிற்கு உட்பட்டப் பகுதியில் உள்ளவர்களும் மார்ச் 30-ந்தேதி வியா ழக்கிழமை கல்குளம் தாலுகாவிற்கு உட்பட டப் பகுதியில் உள்ளவர் களும், மார்ச் 31-ந்தேதி வெள்ளிகிழமை விளவங் கோடு தாலுகாவிற்குட் பட்டப்பகுதியில் உள்ள வர்களும் மற்றும் ஏப்ரல் 1-ந்தேதி சனிக்கிழமை கிள்ளியூர் மற்றும் திருவட் டார் தாலுகாவிற்கு உட் பட்டப் பகுதியில் உள்ள வர்களும் இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

    இம்முகாமிற்கு, இலவச பயண பேருந்து அட்டை பெற்று பயனடைந்து வரும் மாற்றுத் திறனாளிகள் ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டையுடன் தற்போது கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகள் கல்வி பயில்வதற்கான நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அசல் சான்று, பணிக்கு செல்வோர் பணிபுரியும் இடத்திலி ருந்து பணிபுரிவதற்கான அசல் சான்று, சுயதொ ழில் புரிபவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சுயதொழில் புரிவதற்கான அசல் சான்று, தினசரி மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக செல்வோர் மருத்துவ அலுவலரிடம் சிகிச்சை பெறப்படும் அசல் சான் றுடன் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடை யாள அட்டை அசல் மற்றும் நகலுடன், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய வற்றுடன் வருகை தந்து இலவச பேருந்து பயணச்ச லுகை அட்டை பெற்று பயன் அடையலாம்.

    இவ்வாறு செய்திக்குறிப் பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×