குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளை சார்பில் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா

பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளை சார்பில் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா
Published on

என்.ஜி.ஓ.காலனி :

குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளை சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளை தலைவர் சி.டி. ஆர். சுரேஷ் தலைமை தாங்கி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அதன் அருகில் வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்ட விக்ரம் பிரபு நற்பணி மன்ற தலைவர் கருத்திருமன், குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளையின் செயலாளர் வீரசூரபெருமாள், சட்ட ஆலோசகர் வக்கீல் ரெங்கன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் ரவிச்சந்திரன், தவசிலிங்கம், சத்தியன், சுகுமாரன், பனிஜெஸ்டஸ், நாகராஜபிரபு, கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com