search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் 4-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு
    X

    கன்னியாகுமரியில் 4-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு

    • கன்னியாகுமரியில் இன்று அமாவாசையையொட்டி இயற்கை மாற்றம்
    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து சேவை 3 மணி நேரம் பாதிப்பு

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிகடலில் சுனாமிக்கு பிறகுஅடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல்கொந்தளிப் பு, ராட்சதஅலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன.

    குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    இந்த நிலையில்அமா வாசையை யொட்டிகடந்த 15-ந்தேதி முதல் காலையி ல்மட்டும் கன்னியா குமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்படு கிறது. இதனால் அன்று முதல் இன்று வரை காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்ட பத்துக்கு தொடங்க வேண்டிய படகுபோக்குவரத்து தொடங்க வில்லை.11மணிக்கு கடல் சகஜ நிலை க்கு திரும்பிய பிறகு 3 மணி நேரம் தாமதமாக காலை 11மணிக்கு தான் படகு போக்குவரத்து தொடங்குகிறது.

    அதேபோல இன்றும் 4-வது நாளாக காலையில் கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.

    இதனால்கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு 3மணி நேரம் தாமதமாக காலை 11மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

    திருவள்ளுவர் சிலைக்கு ம் விவேகானந்தர் மண்ட பத்துக்கு இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர்சிலைக்கு படகு போக்குவரத்து நடை பெறவில்லை.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவ த்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல்சீற்றமா க காணப்பட்டது.இதனால் இந்தகடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல்15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நட த்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    Next Story
    ×