search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலையில் அதிக பாரம் ஏற்றி வந்த 3 டிப்பர் லாரிகளுக்கு ரூ.1¼ லட்சம் அபராதம்
    X

    தக்கலையில் அதிக பாரம் ஏற்றி வந்த 3 டிப்பர் லாரிகளுக்கு ரூ.1¼ லட்சம் அபராதம்

    • கேரளாவுக்கு கனிம வளங்கள் அனுமதியின்றி கொண்டு செல்லப்படுவதாக புகார்
    • எம்சாண்ட், ஜல்லி பாரம் ஏற்றிக்கொண்டு 3 டிப்பர் லாரிகள் வந்தன.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் அனுமதியின்றி கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் சில வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசாரும், வருவாய்த்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அவ்வப்போது சில வாகனங்கள் சிக்கி உள்ளன. அவற்றுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக எம்சாண்ட், ஜல்லி பாரம் ஏற்றிக்கொண்டு 3 டிப்பர் லாரிகள் வந்தன. அந்த லாரிகளை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து 3 டிப்பர் லாரிகளுக்கும் ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது

    Next Story
    ×