search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 62 பவுன் நகை கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில கொள்ளையர்
    X

    கோப்பு படம் 

    நாகர்கோவில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 62 பவுன் நகை கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில கொள்ளையர்

    • வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர்.
    • கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சைமன் நகரை சேர்ந்தவர் சங்கரநாராயணன்( வயது 38).தனியார் நிறுவன மேலாளர். இவரது மனைவி பிருந்தா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    கடந்த 7-ந் தேதி பிருந்தா குழந்தையுடன் வில்லுக்குறி அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். சங்கரநாராயணன் வேலை விஷயமாக நிறுவனத்தில் தங்கியிருந்தார்.அதிகாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 62 பவுன் நகை, ரூ.90 ஆயிரம் ரொக்க பணம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளையும் போலீசார் பதிவு செய்தனர். அப்போது இரண்டு கைரேகைகள் சிக்கியது. கொள்ளையர்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.

    அந்த பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது .அப்போது கண்காணிப்பு கேமராவில் இரண்டு நபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர் .அந்த நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்த ப்பட்டு வருகிறது.

    முதல் கட்ட விசாரணையில் அவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    Next Story
    ×