search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் மழை நீடிப்பு
    X

    குமரியில் மழை நீடிப்பு

    • சிற்றாறு 2-ல் 67.2 மில்லி மீட்டர் பதிவு
    • அணையிலிருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது 2 நாட்களாக மழை சற்று குறைந்திருந்தது. நேற்று காலையில் வழக்கம்போல் மாவட்டம் முழுவதும் வெயில் அடித்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோசண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    பூதப்பாண்டி, களியல், கன்னிமார், நாகர்கோவில், சுருளோடு, தக்கலை, ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளி லும் மழை வெளுத்து வாங்கியது. சிற்றாறு 2-ல் அதிகபட்சமாக 67.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளிய லிட்டு வருகிறார்கள்.மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு, மாம்ப ழத்துறையாறு அணைகள் நிரம்பி வழிவதையடுத்து அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் உள்ள 2025 குளங்களும் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி உள்ளது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 43.74 அடியாக உள்ளது. அணைக்கு 544 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 72.62 அடியாக உள்ளது. அணைக்கு 315 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 15.81 அடியாக உள்ளது. அணைக்கு 182 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை கடந்த 15 நாட்களாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. நகர மக்களுக்கு முக்கடல் மற்றும் புத்தன் அணையிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை தங்குதடை இன்றி அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள்.

    மழைக்கு அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 3 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 15, பெருஞ்சாணி 27.6, சிற்றாறு 1-6, சிற்றாறு 2-67.2, பூதப்பாண்டி 2.6, களியல் 6, கன்னிமார் 3.6, நாகர்கோவில் 4.2, சுரு ளோடு 10.6, தக்கலை 58.2, இரணியல் 6, பாலமோர் 11.4, மாம்பழத்துறையாறு 17, திற்பரப்பு 44, கோழிப் போர்விளை 26.2, அடை யாமடை 24, ஆணைக்கிடங்கு 16.6.

    Next Story
    ×