search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் மழை நீடிப்பு
    X

    குமரியில் மழை நீடிப்பு

    • குருந்தன் கோட்டில் 58.4 மில்லி மீட்டர் பதிவு
    • சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் இதமான குளிர் காற்று வீசி வருகிறது. குமரி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்ச ரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலையில் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

    இரணியல் பகுதியில் மாலை 5 மணிக்கு வானத் தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அதன்பிறகு இடி-மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது.

    சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மின்னல் கண்ணை பறிக்கும் வகையிலும், இடிச்சத்தம் காதை பிளக்கும் வகையிலும் இருந்தன. மழைக்கு மரங்க ளும் முறிந்து விழுந்து மின்சாரமும் தடைப்பட்டது.

    குருந்தன்கோட்டிலும் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 58.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கோழிப்போர் விளை, தக்கலை, சுருளோடு, பூதப்பாண்டி, அடையா மடை, ஆணைக்கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி பகுதிகளில் சாரல் மழை பெய்தது. ஏற்கனவே பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, மாம்பழத்துறையாறு, முக்கடல், சிற்றாறு அணை கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளதை யடுத்து அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்கா ணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய நீர்வ ரத்திற்கு ஏற்ப தண்ணீரை வெளியேற்றவும் நட வடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.19 அடியாக இருந்தது. அணைக்கு 321 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 173 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.66 அடியாக உள்ளது. அணைக்கு 323 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 400 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வரு வதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது.

    அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து உபரிநீர் வெளி யேற்றப்படும் போது அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்ப தால் பேரூராட்சி நிர்வாகம் அதை கண்காணித்து வரு கிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-பேச்சிப்பாறை 4.2, பெருஞ்சாணி 3.6, சிற்றார் 1-4.2, சிற்றார் 2-10.6, பூதப்பாண்டி 4.6, களியல் 16.2, கன்னிமார் 4.2, கொட்டாரம் 2.2, குழித்துறை 22.2, மயிலாடி 2.2, நாகர்கோவில் 2, புத்தன் அணை 2, சுருளோடு 5.2, தக்கலை 44, குளச்சல் 18.6, இரணியல் 53, பாலமோர் 8.2, மாம்பழத்துறையாறு 30, கோழிப்போர்விளை 54.2, அடையாமடை 2, குருந்தன் கோடு 58.4, முள்ளங்கினா விளை 13.4, ஆணைக்கிடங்கு 29.2, முக்கடல் 24.

    Next Story
    ×